ஓய்வூதியம் தொடர்பான வழக்கில், வழக்குப்போட்டு நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடிப்பதாகக் கூறி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தமிழக போக்குவரத்துத்துறையில் நடத்துராக பணியாற்றி ஓய்வுபெற்ற பி.ஜி. வேணுகோபால் என்பவருக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான வழக்கில், இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு, விருப்ப ஓய்வு பெற்றுவிட்ட வேணுகோபாலுக்கு, பல்வேறு தொழில்நுட்ப காரணங்களைக் காட்டி ஓய்வூதியம் வழங்க போக்குவரத்துத் துறை மறுத்து வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு

இதையடுத்து, தொழிலாளர் ஆணையத்தில் முறையிட ஆரம்பித்தது முதல், உச்ச நீதிமன்றம் வரை போராடி, அந்த உரிமையைப் பெற்றார் வேணுகோபால். ஆனாலும் 2009-ம் ஆண்டு வரையிலான ஓய்வூதிய நிலுவையைக் கொடுத்த போக்குவரத்துத்துறை, அதன்பிறகு தர மறுத்துவிட்டது. மீண்டும் 2019-ம் ஆண்டு, உயர்நீதிமன்றப் படியேறியேனார் வேணுகோபால். இவ்வழக்கில், ஓய்வூதிய நிலுவைத்தொகையை போக்குவரத்துத்துறை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

தற்போது 75 வயதாகும் வேணுகோபால், நீதிமன்றங்களின் படியேறி படியேறி ஓய்ந்துவிட்டார். இந்தச் சூழலிலும், தமிழக போக்குவரத்துத்துறை அவரை விட்டுவைக்க விரும்பவில்லை. அவருக்கு ஓய்வூதியம் தரமறுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசு.

ஓய்வூதியம்

இந்நிலையில்தான், தனது உச்சபட்ச கோபத்தைக் காட்டியுள்ளது, உச்ச நீதிமன்றம். `ஏற்கெனவே, இவருடைய ஓய்வூதிய உரிமை தொடர்பான பிரச்சினையில், உச்ச நீதிமன்றமே இறுதி உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், அவர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என்று தமிழக அரசு துணிச்சலாக வாதிடுவது தவறானது. இப்படி தேவையில்லாத விஷயங்களுக்கு வழக்குப்போட்டு நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடிக்கிறது’ என்று கூறிய நீதிபதிகள், தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதத்தையும் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.