ஈரானின் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம், மாநிலத்தின் கடுமையான கற்பு விதிகளை அடிப்படையாகக் கொண்டு பெண்கள் இனி விளம்பரங்களில் தோன்றுவதற்கு தடை விதிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

தளர்வாக ஹிஜாப் அணிந்துகொண்டு ஒரு பெண் ஐஸ்க்ரீமை கடிப்பதுபோன்ற மேக்னம் விளம்பரம் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்நாட்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் ஈரானிய மதகுருக்களின் கோபத்தை தூண்டியதையடுத்து அவர்கள் உள்ளூர் ஐஸ்கிரீம் உற்பத்தியாளரான டோமினோ மீது வழக்குத் தொடர அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதனையடுத்து, இந்த விளம்பரம் “பொது கண்ணியத்திற்கு எதிரானது” என்றும், “பெண்களின் மதிப்புகளை அவமதிப்பதாக’’ இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஈரானின் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம் நாட்டின் கலை மற்றும் சினிமா பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஹிஜாப் மற்றும் கற்பு விதிகளை அவமதித்ததால் பெண்கள் இனி விளம்பரங்களில் தோன்ற அனுமதியில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் இந்த உத்தரவு கலாசார புரட்சியின் சுப்ரீம் கவுன்சில் வழங்கிய தீர்ப்புகளுக்குள் அடங்கும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.


மேலும், வர்த்தக விளம்பரங்கள் தொடர்பான ஈரான் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலும் இந்த தடை பொருந்தும் என்றும், இது பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் ஆண்களை “கருவிகளாக உபயோகிப்பதை” தடை செய்கிறது எனவும் குறிப்பிட்டிருக்கிறது. பொதுவாக ஒரு நாடு அல்லது இடத்தின் ஆளும் நிர்வாகத்தைப் பொருத்து “கருவி பயன்பாடு(instrumental use)” என்ற வார்த்தையின் பொருளும் மாறுபடும்.

1979ஆம் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பலமுறை பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல பெண்கள் ஹிஜாப் அணியாமல் பொதுஇடங்களுக்குச் சென்று தங்கள் உயிரை பணயம் வைத்து கைதாகியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.