48 வயதாகும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் திருமணம் நாளை சண்டிகரில் எளிமையான முறையில் நடைபெற உள்ளது.

நகைச்சுவையாளர், பாடகர், நடிகர், சமூக சேவகர், அரசியல் பிரமுகர் என பன்முகத் திறமை கொண்டவர் தற்போதைய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று பகவந்த் மான் முதல்வராக பதவி வகித்து வருகிறார். பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஊழல் புகாரில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லாவை பதவி நீக்கம் செய்தது, தேர்தல் வாக்குறுதியின் படி ஜூலை 1-ம் தேதி முதல் மாதத்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குதல் என பகவந்த் மான் செயல்பட்டு வருகிறார்.

image

இந்நிலையில் சண்டிகரில் உள்ள அரசு இல்லத்தில் நெருங்கிய நண்பர்கள், அரசியல் தலைவர்கள், உறவினர்கள் முன்னிலையில் நாளை முதல்வர் பகவந்த் மானுக்கு இரண்டாவதாக திருமணம் நடைபெற உள்ளது. மருத்துவரான குர்ப்ரீத் கவுர் என்பவரை, பகவந்த் மான் கரம் பிடிக்கிறார். பகவந்த் மானின் தாய் மற்றும் சகோதரிதான் இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த திருமண விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.

image

இதையொட்டி பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 48 வயதாகும் முதல்வர் பகவந்த் மான் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் மனைவி இந்திரப்ரீத் கவுர் என்பவரை ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்தார். முதல் திருமணத்தின் மூலம் சீரத் கவுர் மான் என்ற 21 வயது மகளும், 17 வயதில் தில்ஷன் மான் என்ற மகனும் இருக்கின்றனர். பக்வந்த் மான் முதல்வராக பதவியேற்ற போது அவர்கள் இருவரும் விழாவுக்கு வந்து கலந்து கொண்டனர். முதல் மனைவி தனது குழந்தைகளோடு அமெரிக்காவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.