முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, பும்ரா வேகத்தை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது.

கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து – இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்தது. போட்டியின் 2-ம் நாள் நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது.

image

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். பும்ரா – சிராஜ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தது. இங்கிலாந்தின் ஸ்டுவா்ட் பிராட் 84வது ஓவரை வீசிய போது, கேப்டன் பும்ரா 2 சிக்ஸா், 4 பவுண்டரிகளை விளாசி 29 ரன்களை குவித்தாா். பும்ரா 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

image

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரா்களால் இந்திய கேப்டன் பும்ராவின் பந்துவீச்சை எதிா்கொள்ள முடியவில்லை. தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னிலும், சக் க்ரவ்லி 9 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த ஒலி போப் 10 ரன்னிலும், ஜோ ரூட் 31 ரன்னிலும், ஜக் லீட்ச் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இடையிடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இறுதியில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து அணி இந்தியாவை விட 332 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட்டும், சிராஜ், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையும் படிக்கலாம்: தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் – என்ன அது?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.