நாகை: முதலிரவில் பாலியல் துன்புறுத்தல்… காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்!
நாகை அருகே இளம்பெண் ஒருவர் முதலிரவில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். தலைமறைவான கணவரைக் கைதுசெய்யக்கோரி உறவினர்கள் நாகை எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். நாகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 26-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக 12 பவுன் நகை மற்றும் கட்டில், மெத்தை, பீரோ, இருசக்கர வாகனம் எனச் சீர்வரிசையாகவும்…