பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 41’ படம் கைவிடப்பட்டதாக வதந்தி பரவிவந்த நிலையில், சூப்பரான அப்டேட் கொடுத்திருக்கிறார் சூர்யா.

சூர்யா – பாலா மூன்றாவது முறையாக ’சூர்யா 41’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின், அறிவிப்பு அதிகாரபூர்வமாக கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. துருவ் விக்ரமின் ‘வர்மா’ படத்திற்குப் பிறகு பாலா இப்படத்தை இயக்குகிறார். ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் துவங்கவுள்ள நிலையில், பாலா-சூர்யா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் கன்னியாகுமரியில் துவங்கியுள்ளது. சூர்யா தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக, ‘உப்பெனா’ புகழ் கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடர்ச்சியாக கன்னியாகுமரியில் நடைபெற்றுவந்த நிலையில், கடந்த மாதம் “சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அதனால், சூர்யா பாதியிலேயே கிளம்பிவிட்டார்” என்று தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுத்த தயாரிப்பு நிறுவனம் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்கவுள்ளது என்று ஃபுல்ஸ்டாப் வைத்தது.

image

இந்த நிலையில்தான் மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக ‘சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் கைவிடப்பட்டதாக வதந்தி பரவி வந்தது. “பாலா ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் எடுத்ததால் கடுப்பாகிப் போன சூர்யா படத்தினை ட்ராப் செய்துவிட்டார்” என்று சொல்லப்பட்டது. இதனை மறுக்கும் விதமாக பாலாவுடன் சூர்யா அமர்ந்திருக்கும் ‘சூர்யா 41’ படத்தின் கெட்டப்புடன் இருக்கும் சூப்பர் போட்டோவை பகிர்ந்து ”‘சூர்யா 41’ படப்பிடிப்புக்காக காத்திருக்கிறேன்” என்று உற்சாகமுடன் பதிவிட்டிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.