தெலங்கானா மாநிலம், சூர்யாபேட் மாவட்டத்தில் 20 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அம்மாநில ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் கவுன்சிலர் மகன் உட்பட 2 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய தெலங்கானா போலீஸ் அதிகாரி, கோடாட் காவல்நிலையத்துக்கு தன் தாயுடன் வந்த பாதிக்கப்பட்ட பெண், கடந்த 17-ம் தேதி தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, டி.ஆர்.எஸ் கட்சியின் கவுன்சிலர் மகன் ஷேக் கவுஸ் மற்றும் சாய் ராம் ஆகியோர் மீது புகாரளித்தார்.
அதனடிப்படையில், சம்பத்தப்பட்ட இருவரையும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளோம். இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என கூறியிருந்தார்.
இதேபோல் கடந்த சில நாள்களுக்கு முன் மேற்கு வங்கத்தில், கூட்டு பாலியல் வன்கொடுமையில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், ஆளுங்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் மகன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.