சென்னையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவரை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில நாள்களாக மாணவி முகேஷிடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மனவேதனையடைந்த முகேஷ், தன்னுடைய நண்பன் சையத் மசூத்தை அழைத்துக் கொண்டு பைக்கில் மாணவியைச் சந்திக்கச் சென்றார். வேளச்சேரி பகுதியில் மாணவி தனியாக நிற்பதை முகேஷ் பார்த்தார். உடனே அங்குச் சென்ற அவர், மாணவியிடம் ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய், என்னை நீ காதலிக்க வேண்டும் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

முகேஷ்

அப்போதும் மாணவி முகேஷ், அவரின் நண்பர் சையத் மசூத்துடன் பேசவில்லை. அதனால் ஆத்திரமடைந்த முகேஷ், ஹெல்மெட்டால் மாணவியை தாக்கியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாணவியிடம் விவரத்தைக் கேட்டுள்ளனர். அதைப்பார்த்த இருவரும் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து பள்ளிக்குச் சென்ற முகேஷ், சையத்தும் மாணவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மாணவி, கிண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வெட்டுவாங்கேணி, கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த முகேஷ் (22), சைதாப்பேட்டையைச் சேர்ந்த சையத் மசூத் (23) ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.