ஜோதிமணியை முன்வைத்து உச்சம் தொடும் களேபரம் – என்ன நடக்கிறது கரூர் காங்கிரஸில்?!
“`கரூர் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பிரிப்பதில் ஜோதிமணிக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், இப்போதைக்கு முற்றுப்பெறாதுபோல’ என அரசியல் அரங்கில் பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், “கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க பலத்தோடு போட்டியிட்டாலும், காங்கிரஸ் 95 சதவிகிதம் தோற்றதற்குக் காரணம் ஜோதிமணியும், அனுபவம் இல்லாத மாவட்டத் தலைவர் சின்னசாமியும்தான்” என்று காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினீயர் பிரபாகர் என்பவர் வெளிப்படையாக விமர்சித்திருப்பது, காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபாகர் கண்டன…