எதிர்வரும் ஐபிஎல் 2022 சீசனில் பத்து அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் நாளை (ஜனவரி 22) தங்கள் அணி சார்பில் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரத்தை ஐபிஎல் நிர்வாகக் குழுவிடம் சமர்பிக்க உள்ளன.
இந்நிலையில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை அந்த அணியின் நிர்வாகம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பாண்ட்யா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். உள்ளூர் மக்களை ஈர்க்கும் வகையில் இதனை அகமதாபாத் அணி செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
பாண்ட்யா மட்டுமல்லாது சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஷூப்னம் கில்லை அகமதாபாத் அணி தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. அது தொடர்பான விவரம் நாளை உறுதியாக தெரிந்துவிடும்.