இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது, நேற்றைவிடவும் 29,722 அதிகம்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,51,777 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3.60 கோடி என்றாகியுள்ளது. குணமடைவோர் விகிதம் 93.5% என்றாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு உறுதியானோரில் 9,692 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. இது, நேற்றைவிட 4.36% அதிகமென கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 19,35,912 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் 3,47,254 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தினசரி தொற்று உறுதிசெய்யப்படுவோர் விகிதம் 17.94 % என உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையிலிருபோரின் மொத்த எண்ணிக்கை இந்தியாவில் 20 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர், 703. இதன்மூலம் இதுவரையிலான கொரோனா உயிரிழப்பு, 4.88 லட்சமாக உயர்ந்துள்ளது.
சமீபத்திய செய்தி: அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட வாய்ப்பு