தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியுள்ளது.
இன்று பிற்பகல் முதல் ஏர்டெல் பயனாளர்களுக்கு ஏர்டெல் நெட்வொர்க்கில் இணைய சேவை மட்டுமன்றி அலைபேசி சேவையும் முடங்கி இருந்தது. இதனால் அந்நிறுவனத்தின் பயனாளர்கள் அவதியுற்றுள்ளனர்.
ஏர்டெல்லின் இந்தப் பிரச்னை குறித்து சமூக வலைதளங்களில் புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்தது. அப்படி ட்விட்டரில் வெளியிடப்பட்டிருந்த செய்திக்கு, ஏர்டெல் கேர்ஸ் பதில் அளித்துள்ளது. தனது அப்பதிலில், ”எங்களுக்கு ஒரு சிறிய தொழில்நுட்ப சிக்கல் இருந்தது. அது இப்போது சரி செய்யப்பட்டது” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் சில வாடிக்கையாளர்களுக்கு இன்னும் பல சேவைகள் முழுமையாக கிடைக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. அவர்கள் ட்விட்டரில் #Airtel என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் பிரச்னையை பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து #Airtel, ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது.
சமீபத்திய செய்தி: உ.பி. சட்டசபை தேர்தல் – கூட்டணியை அறிவித்தது பாஜக