இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி போலேண்ட் பார்க்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 296 ரங்களை குவித்தது. தொடர்ந்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. 

image

கேப்டன் ராகுல் 12 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த கோலி, தவானுடன் 92 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். தவான் 79 ரன்களில் அவுட்டானார். கோலி 51 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஷ்ரேயஸ் ஐயர், பண்ட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் அடுத்தடுத்தது அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அஷ்வின் மற்றும் புவனேஷ்வர் களத்திற்கு சென்ற வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.  

ஆனால் ஷர்துல் தாக்கூர், பும்ராவுடன் இணைந்து ஒன்பதாவது விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதனால் இந்தியா இறுதி பந்து வரை வெற்றிக்காக போராடி வீழ்ந்தது. தாக்கூர் 43 பந்துகளில் 50 ரன்களை சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார். கடைசி பந்தில் சிங்கிள் தட்டி ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் அரை சதத்தை அவர் பதிவு செய்தார். இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.