மசால் பொடி குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 17 லட்சம் மதிப்புள்ள 1 டன் குட்கா பறிமுதல்
ராஜபாளையத்தில் மசால் பொடி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 17 லட்சம் மதிப்பிலான 1000 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சிறப்பு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராஜபாளையத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் முழுவதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மறைமுகமாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக டிஐஜியின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தடுப்பு தனிப்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து…