Banner

மசால் பொடி குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 17 லட்சம் மதிப்புள்ள 1 டன் குட்கா பறிமுதல்

ராஜபாளையத்தில் மசால் பொடி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 17 லட்சம் மதிப்பிலான 1000 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சிறப்பு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராஜபாளையத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் முழுவதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மறைமுகமாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக டிஐஜியின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தடுப்பு தனிப்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து…

Read More
Banner

சபரிமலையில் தொடர்ந்து நடைபெறும் களபாபிஷேக வழிபாடு: திரளாக தரிசனம் செய்யும் பக்தர்கள்

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பிரசித்தி பெற்ற களபாபிஷேகம் வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மகரவிளக்கு பூஜை காலத்தின் முதல் ‘களபாபிஷேகம்’ வழிபாடு நடைபெற்றது. ஐயப்பனின் சக்தியை அதிகரிக்க நடத்தப்படும் ‘களபாபிஷேகம்’ பூஜையில் பங்கேற்றால் சர்வ ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். நினைத்த காரியம்…

Read More
Banner

“சென்னை வானிலை ரேடார்களை உடனடியாக சரி செய்க” – தயாநிதி மாறன் கோரிக்கை

சென்னையில் பழுதடைந்துள்ள வானிலை ரேடார்களை உடனடியாக சீரமைக்குமாறு, மத்திய அரசை தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் பழுதடைந்துள்ள வானிலை ரேடார்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கக் கோரி, ஏற்கனவே 2 முறை பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்ததாக தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பல முறை கேள்விகள் எழுப்பியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். ரேடாரின் பழுதை சீரமைக்காததால் கனமழை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க முடியவில்லை என்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.