ராஜபாளையத்தில் மசால் பொடி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 17 லட்சம் மதிப்பிலான 1000 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சிறப்பு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ராஜபாளையத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் முழுவதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மறைமுகமாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக டிஐஜியின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தடுப்பு தனிப்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

image

இதனை அடுத்து ராஜபாளையத்தில் உள்ள ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் தனிப்பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரபலமான மசாலா பொடிகள் விற்பனை செய்யும் மொத்த குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில் ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர், அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மசாலா பொடி கிடங்கு என்ற பெயரில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து கோவிந்தன் என்பவரை கைது செய்துள்ள காவல் துறையினர், கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 17 லட்சம் மதிப்பிலான 1000 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.