திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஏரி 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

துறையூர் அருகே சிங்களாந்தபுரத்தில் உள்ள ஏரி சுமார் 185 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 2000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையால் 17 ஆண்டுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.

image

இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு வெடி வெடித்தும், மலர்தூவி, இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஏரி நிறைந்து கடல்போல் காட்சியளிப்பதை, பொது மக்கள் அலை அலையாக ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.