லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, அதை தள்ளுபடி செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக லஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைக்க கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “மாநில மற்றும் மாவட்ட அளவில் ஊழலை தடுக்க பறக்கும் படைகள் அமைக்க வேண்டும்” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு அரசுத்தரப்பில் “இந்த நடவடிக்கையாவும் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு, ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகின்றது” என தெரிவிக்கப்பட்டது.

image

இருதரப்பு வாதத்தையும் தொடர்ந்து, நீதிபதிகள் “லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைப்பது குறித்து அரசு நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்” என தெரிவித்தனர். மேலும், அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, இந்த வழக்கை வாபஸ் பெற மனுதாரர் அனுமதி கோரியதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி: பறக்கும் படை சோதனை: திருச்சி மாவட்டத்தில் சாக்குமுட்டையில் பதுக்கிய ரூ. 1 கோடி பறிமுதல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.