கூடலூர் அருகே நள்ளிரவு மேலும் இரண்டு வீடுகளை அரிசிக்காக இடித்து காட்டு யானை அரிசி ராஜா சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை, பாடந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முகாமிட்டுள்ள மக்னா யானை, அரிசி உள்ளிட்ட உணவுக்காக இதுவரை 25-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தி இருக்கிறது. அந்த யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக இரண்டு கும்கி யானைகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்களை கொண்டு வனத்துறை தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

image

இருப்பினும் அந்த யானை உணவுக்காக வீடுகளை சேதப்படுத்துவது தொடர்கதையாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 3 வது டிவிசன் பகுதிக்குள் நுழைந்த அந்த யானை அப்பகுதியில் உள்ள இரண்டு வீடுகளை சேதப்படுத்தி வீட்டின் உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட உணவுகளையும் திண்றுள்ளது. யானை வீட்டை உடைத்த நேரத்தில் உள்ளே இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.