ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் டிசம்பர் 15 முதல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் டிசம்பர் 15 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை தொடங்கப்படாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், சர்வதேச பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான சரியான தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

image

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு பாதிப்பு இதுவரை 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

இதனைப்படிக்க…ஆர்டி-பிசிஆருக்கான தெர்மோ டெக்பாத் போதுமான அளவு கையிருப்பு உள்ளது -மா.சுப்பிரமணியன் பேட்டி 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.