’மாநாடு 2’ எடுக்கப்படும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தியிருக்கிறார்.

’ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் கடந்து ‘மாநாடு’ கடந்த 25 ஆம் தேதி வெளியானது. எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வெளியாகாமல் ஒர்க்கிங் நாளில் வெளியாகியே படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாய் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக இதுவரை வெளியான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று நன்றி தெரிவித்து ட்விட்டர் ஸ்பேஸில் உரையாடியானார்.

image

அப்போது பேசியவர், “மாநாடு படத்தில் எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவைத்தான் அணுகினோம். அவர், பிஸியாக இருந்ததால் எஸ்.ஜே சூர்யா நடித்தார். ஆனால், தற்போது ரவிதேஜா படத்தைப் பார்த்துவிட்டு ‘மாநாடு’ தெலுங்கில் எடுத்தால் நான் நிச்சயம் எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், சிம்புவுக்கு படத்தின் இறுதியில் மீண்டும் ‘டைம் லூப்’ காட்சி வருவதுபோல் வைத்திருக்கிறோம். சிம்புவுக்கு டைம் லூப் வரும்போது எஸ்.ஜே சூர்யாவுக்கும் வரும். அப்போது, தனுஷ்கோடியும் மீண்டும் வருவார். ‘மாநாடு 2’ தற்போதுள்ளப் பணிகளை முடித்துவிட்டு எடுப்போம்” என்று உற்சாகமுடன் கூறியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.