சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிலம்பம் பயிற்சியாளரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தனியார் பள்ளியில் படித்து வரும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு சீலியம்பட்டியை சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளர் எட்டாம் வகுப்பு முதல் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், சிலம்பம் பயிற்சியாளர் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தாக புகார் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சல் அடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

image

கடைசி நேரத்தில் பெற்றோர் அதை கவனித்து மாணவியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, சிலம்பம் பயிற்சியாளர் பற்றி தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், உறவினர்களும், உடனடியாக சிலம்பம் பயிற்சியாளரை பிடித்து அடித்து, காவல்துறையில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின், பள்ளியின் தாளாளர் ஸ்ரீபன் தேவராஜ், சிலம்பம் பயிற்சியாளர் ராஜா ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.