விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தை தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா என்று  சி.எம்.டி.ஏ மற்றும் மார்கெட் கமிட்டி ஆகியவை வரும் திங்கட்கிழமை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போதுள்ள தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நான்கைந்து சிறு வியாபாரிகள் இணைந்து தக்காளி மைதானத்தில் வாகனத்தை நிறுத்தி தக்காளி விற்பனையை மேற்கொள்ள தாற்காலிகமாக அனுமதிக்கலாம், அதற்கு கட்டணத்தை வசூலிக்கலாம் என்று நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

image

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயம்பேட்டில் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்கு விளக்கமளித்துள்ள சிஎம்டிஏ, லாரிகளில் வந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் இடத்தில் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளது, மைதானத்தில் வாகனங்களை நிறுத்தியதால் மூடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப்படிக்க…எதிர்க்கட்சித் தலைவரா நயினார் நாகேந்திரன்? – கல்வெட்டு பிழை திருத்தப்படும் என பாஜக தகவல் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.