கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், செக் குடியரசு, 30 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.
செக் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 26 ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டுள்ளது. இதையடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 30 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் சந்தைகளை மூடவும், பொது இடங்களில் மது அருந்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பார்கள், ஹோட்டல்களை இரவு 10 மணிக்கு மூடவும் ஆணையிடப்பட்டுள்ளது. கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் தடுப்பூசி செலுத்திய ஆயிரம் பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஐரோப்பாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – மக்கள் அச்சம்