ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஞாயிறு அன்று திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் தனது திருமணத்தை முன்னிட்டு தனது தந்தை சேகரித்து வைத்த வரதட்சணை தொகைக்கான பணத்தில் மகளிர் விடுதி கட்டிக் கொள்ள பயன்படுத்துமாறு தனது தந்தை கிஷோர் சிங் கானோட் வசம் மணமகள் அஞ்சலி சொல்லியுள்ளார்.
மகளின் விருப்பத்தை மனம் நிறைந்து ஏற்றுக் கொண்ட கிஷோர் சிங் கானோட், தொகை ஏதும் குறிப்பிடாமல் (Blank Cheque) காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். ‘உனக்கு எவ்வளவு வேண்டுமோ? அவ்வளவு எழுதிக் கொள்!’ என சொல்லி மகளிடம் கொடுத்துள்ளார்.
திருமணத்தின் போது மணமகள், பெண் கல்வி மற்றும் மகளிர் மேம்பாடு குறித்து மேற்கொண்ட இந்த முயற்சி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.