கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அம்மாவட்டங்களுக்கு இன்று காலை எச்சரிக்கை விடுத்திருந்தது. போலவே தற்போது தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிவப்பு வண்ண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

கனமழை தொடர்பான இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 12 மாவட்டங்களில், இரவு 7.30 மணி நிலவரப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர், ராமநாதபுரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும்; திருநெல்வேலி, தென்காசி, பெரம்பலூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

image

முன்னதாக நெல்லை, தூத்துக்குடியில் இன்று மதியமே பள்ளிகளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.