‘ஒன்பிளஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்ல் பெய் (Carl Pei), கடந்த ஜனவரியில் ‘நத்திங்’ என்ற நிறுவனத்தை நிறுவினார். மக்களுக்கும், தொழில்நுட்பத்திற்கும் இடையே உள்ள தடைகளை நீக்கும் நோக்கில் இதனை தொடங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார் கார்ல் பெய்.
இந்த நிறுவனம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியது. சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்ட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த திரைப்பட இயக்குனர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கரண் ஜோஹர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி, டிஜிட்டல் கன்டென்ட் ரைட்டர் ரன்வீர் அல்லபாடியா மற்றும் பாடகி ஜஸ்லீன் ராயல் மாதிரியான பிரபலங்கள் இதில் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டு தொகையை கொண்டு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளதாக நத்திங் நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்தது.