இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி T20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. T20 தொடர் முதலில் தொடங்கின. மூன்று போட்டிகள் கொண்ட இந்த T20 தொடரில் ஏற்கெனவே இந்தியா 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி T20 போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இஷான் கிஷன் 29 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரை சதம் கடந்த ரோகித் சர்மா, 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். வெங்கடேஷ் (20), ஸ்ரேயாஸ் (25), ஹர்ஷல் படேல் (18), தீபக் சஹர் (21) என ரன் சேர்க்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது. நியூஸிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் மட்டுமே 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேல் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷல் படேல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் இறுதியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பறியது.