திருச்சி: அரசு அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு; ஆவணங்களை அள்ளிச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்!
அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சூழலில், ஒரு அரசு அதிகாரி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, அவரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மலைக்கோட்டை வீடு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் வீரமணி, கரூர் விஜயபாஸ்கர், வேலுமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில முன்னாள் அமைச்சர்களின்…