பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி!
தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பதவி பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரம், 7 பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் ஆளுநரிடம் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி இன்று சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.