நெல்லை மாவட்ட பஞ்சாய்த்து தலைவருக்கான மறைமுக தேர்தலில் பாதுக்காப்புக்காக குவிக்கப்பட்டுள்ள போலீஸார்!
இடம்: கேடிசி நகர்
வீடியோ: எல்.ராஜேந்திரன்
விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் ரெய்டு!
கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கடந்த 17-ம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. விஜயபாஸ்கருக்கு சொந்தமான மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று, விஜயபாஸ்கருடன் தொடர்புடைய உதவியாளர் சரவணன் வீடு, நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், மற்றொரு உதவியாளர் முருகன் வீடு உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த முறை ரெய்டு நடந்த போது, இந்த இடங்கள் மூடி இருந்ததால், அதிகாரிகள் சீல் வைத்துவிட்டுச் சென்றனர். இன்று நீதிமன்ற உத்தரவுடன் இன்று ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை!
இந்தியாவில் மெகா கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட 9 மாதங்களில் 100 கோடி டோஸ் என்கிற இமாலைய இலக்கை எட்டியுள்ளது. 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த இந்தியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். நாட்டு மக்களிடம் மோடி உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்றைய உரையில் வேறு ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது!