ரஷ்யாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 33,740 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒரேநாளில் 1,015 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அக்டோபர் 30ஆம் தேதி முதல் மீண்டும் கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தலாம் என ரஷ்ய துணைப் பிரதமர் பரிந்துரைத்துள்ளார். ரஷ்யாவில் இதுவரை கொரோனாவுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.