பேருந்துகளை இடதுபுற திசையில் உள்ள உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் கிளை மேலாளர்கள், கோட்ட மேலாளர்களுக்கு அதன் பொது மேலாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பேருந்துகளை இடதுபுறத்தில் உள்ள உணவகத்தில் நிறுத்தாமல் எதிர் திசையிலுள்ள உணவகத்திற்கு சாலையை குறுக்கே கடந்து செல்லும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பேருந்துகளை கட்டாயம் இடது புறத்திலுள்ள உணவகத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் எனவும் இதனை மீறும் ஓட்டுநர்கள், நடந்துநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.