ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடல்கள் 48 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளன.
 
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தர் பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் ஏற்கனவே 7 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், மேலும் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற நீண்ட நேர துப்பாக்கிச் சண்டையில் அஜய் சிங் மற்றும் ஹரேந்திர சிங் என்ற 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த இரு வீரர்களின் உடல்கள் 48 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய ராணுவத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
 
image
முன்னதாக அதே பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இரு துப்பாக்கிச் சண்டையில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சண்டையின் போது இதுவரை 13 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வியாழக்கிழமை முதல் பூஞ்ச் -ஜம்மு நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.