ஜெயலலிதா நினைவிடம் புறப்பட்டார் சசிகலா
சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு இன்று சென்று, காலை 11 மணிக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோர் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்த இருக்கிறார். இதற்காக தற்போது அவர் தனது வீட்டில் இருந்து புறப்பட்டிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வின் தோல்வியை அடுத்து கட்சியை கைப்பற்றும் முயற்சிகளை அடுத்தது செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது!
சசிகலா: ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று மரியாதை!
எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுக, தனது பொன்விழா ஆண்டில் நாளை (அக்டோபர் 17) காலடி எடுத்து வைக்க உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவுக்கு பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இந்தநிலையில் சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு இன்று சென்று, காலை 11 மணிக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோர் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்த இருக்கிறார். தனது அரசியல் சுற்றுப்பயணம் தொடர்பான அறிவிப்பை அப்போது வெளியிடுவாரா என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்களாம்.
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு தொடக்க நாளான நாளை, சசிகலா, சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு சென்று எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கும் சசிகலா செல்கிறார். சசிகலா தொடர்ந்து அதிமுக கொடி கட்டிய காரில் பயணித்து வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது!