சென்னையில் ஊர்க் காவல்படையில் பணியாற்றி வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த அருண் பாண்டியன், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். படுக்கைக்குச் சென்றவர், மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் அருண் பாண்டியனின் உடலைக் கைப்பற்றி கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளநிலை பட்டதாரியான அந்த இளைஞர் சரியான வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவ்விளைஞரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதனைப்படிக்க…இறக்குமதி கச்சா சமையல் எண்ணெய்கான வரியை குறைத்தது மத்திய அரசு