தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,37,423 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 1,259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் 1,289 என்றிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இதில் சென்னையை சேர்ந்தவர்கள் 163 பேர். கோவையில் 143 பேர், செங்கல்பட்டில் 95 பேர், கோவையில் 137 பேர், செங்கல்பட்டில் 95 பேர், ஈரோடு 79 பேர், திருப்பூர் 74 பேர், தஞ்சை 63 பேர், திருவள்ளூர் 61 பேர், சேலம் 56 பேர், நாமக்கல் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையை சேர்ந்தோர் 12 பேர், தனியார் மருத்துவமனையை சேர்ந்த்தோர் 8 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,853 என உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி: “கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைப்பதே பெட்ரோல் மீதான வரியில் இருந்துதான்” – மத்திய அமைச்சர்

image

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து மேலும் 1,438 பேர் குணமடைந்ததை தொடர்ந்து, தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 15,451 என உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26,32,092 என்று உயர்ந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.