அடுத்த சில நாட்களில் ஓமன் மற்றும் அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் பவுலிங் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
அக்சர் பட்டேலுக்கு மாற்றாக தாக்கூர் 15 பேர் அடங்கிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. தேர்வு குழுவினர் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த முடிவினால் அக்சர் பட்டேல் ரிசர்வ் வீரராக அணியில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்!
விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
ரிசர்வ் வீரர்கள் : ஷ்ரேயஸ் ஐயர், தீபக் சாஹர், அக்சர் பட்டேல்.
இவர்களை தவிர ஆவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், லுக்மான் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கரண் ஷர்மா, ஷபாஸ் அகமது மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் என 8 வீரர்கள் இந்திய அணியின் பயோ பபூளில் இருப்பார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இவர்கள் உலகக் கோப்பைக்கு தயாராகும் அணிக்கு உதவுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோக, டி20 உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.