அடுத்த சில நாட்களில் ஓமன் மற்றும் அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் வழிகாட்டியாக (Mentor) முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செயல்பட உள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்தது. 

image

இந்த நிலையில், அந்த பணியை செய்ய அவர் ஒரு பைசா கூட வேண்டாம் என சொல்லிவிட்டதாக பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளனர். 

“இந்திய அணிக்கு வழிகாட்டியாக செயல்பட உள்ள தோனி அதற்கான கட்டணம் எதுவும் வேண்டாம் என சொல்லிவிட்டார்” என தெரிவித்துள்ளார் சவுரவ் கங்குலி. 

“டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு வழிகாட்டும் தோனி அதற்கான சன்மானம் எதுவும் தனக்கு தேவையில்லை என் சொல்லி உள்ளார். என்னுடைய நன்றிகளை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 

இந்த பணியை செய்ய தோனிக்கு கிடைக்க வேண்டிய சன்மானம் என்றால் அது உலகக் கோப்பை மட்டும் தான். அதை இந்திய அணியின் வீரர்கள் நிச்சயம் வென்று கொடுப்பார்கள் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.