தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என். ரவி குடும்பத்துடன் மாமல்லபுரம் சென்று கடற்கரை கோயிலைப் பார்வையிட்டார்.
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, ஆர்.என். ரவி புதிய ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து குடும்பத்துடன் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்குச் சென்ற அவர், புராதன சிற்பங்களைப் பார்வையிட்டார். அங்கு முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்த பின் சென்னைக்குத் திரும்பினார்.
இதையும் படியுங்கள்: “ஆளுநர் நியமனத்தில் உடன்பாடில்லை; அழைப்பு வந்தும் பங்கேற்றவில்லை” – திருமாவளவன்