தமிழகத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த மாநில அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். பல மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ய 15 நாள் தாமதம் ஆவது தெரியவந்துள்ளதாகவும், நெல் மணிகள் மழையில் நனைந்து முளைக்கும் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பல இடங்களில் நெல் மூட்டைகள் வைக்க இடமில்லை என்றும் சாக்கு வாங்கி வாருங்கள் என்றும் விவசாயிகளை அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Edappadi says proof documents not compulsory for NPR - The Hindu

சில இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும் முன்னாள் முதலமைச்சர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது போன்ற குறைகளை களைந்து விவசாயிகள் உழைப்புக்கு தக்க பலன் கிடைக்கச் செய்யுமாறு அரசை எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.