சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இன்டியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த ஆட்டத்தின் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

image

சென்னை அணிக்காக ருதுராஜ் மற்றும் டுப்ளசிஸ் இன்னிங்ஸை தொடங்கினார். மும்பை அணிக்காக முதல் ஓவரை போல்ட் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் டுப்ளசிஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். 

தொடர்ந்து வந்த மொயின் அலி, ஆடம் மில்னே வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து வந்த ராயுடு, ரிட்டைர்ட் ஹேர்ட் முறையில் வெளியேறினார். 

ரெய்னாவும் 4 ரன்கள் சேர்த்த நிலையில் போல்ட் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் வெளியேறினார். ருதுராஜ் உடன் தோனி இரண்டு ஓவர் தாக்குப் பிடித்தார். ஆனால், கேப்டன் தோனியும் 3 ரன்களில் நடையைக் கட்டினார். 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. 

இதையும் படிக்கலாம் : சர்ச்சையான ’AUKUS’ உடன்படிக்கை : அமெரிக்கா-ஆஸி.-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே என்ன சிக்கல்? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.