தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,653 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,697 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,56,850 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,697ஆக உள்ளது. சென்னையில் நேற்று 204 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 232 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனாவால் இன்று 27 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,337 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 24 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 4 பேர். 50 வயதுக்குட்பட்டோர் 4 பேர்.

image

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,969ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,594 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,93,074 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.