அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மும்பை அணியுடன் விளையாடுகிறது. இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான டூப்ளசிஸ், மும்பைக்கு எதிரான போட்டியில் களம் காண்பாரா என்பது சந்தேகமாகி உள்ளது.
View this post on Instagram
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிய போது அவருக்கு ஏற்பட்ட காயம் இதற்கு காரணமாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் துபாய் வந்த அவர், தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் விளையாடுவாரா என்பது குறித்த விளக்கத்தை கொடுத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன்.
“தற்போது அவர் குவாரன்டைனில் உள்ளார். அது முடிந்ததும் அவரது உடல் திறன் பரிசோதித்த பிறகு தான் ஒரு முடிவுக்கு வர முடியும். இருதாலும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இப்போதைக்கு இது குறித்து கவலை ஏதும் கொள்ள தேவையில்லை” என அவர் சொல்லியுள்ளதாக இன்ஸைட் ஸ்போர்ட் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம் : அமீரகத்தில் ஐபிஎல்: முதல் போட்டியே செம்ம வெயிட்டு.. இதுவரை சிஎஸ்கே Vs மும்பை எப்படி?