பிரேசிலைச் சேர்ந்த முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே மீண்டும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

80 வயதான பீலே உடல்நலக்குறைவு காரணமாக சா போலா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து பீலேவின் உடல் நிலை மோசமடைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

ஆனால் பீலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் பீலேவின் மகள் கெல்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாம் : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எவற்றின் விலை குறையும்? எவை விலை உயரும்? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.