அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக வெள்ளைக் கொடிகள் நடப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா, அமெரிக்காவிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, வாஷிங்டன் நகரில் உள்ள நேஷனல் மால் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. அங்கு ஆறரை லட்சத்துக்கும் அதிகமான வெள்ளைக் கொடிகள் நடப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்: ஐ.நா. கட்டுப்பாடுகளை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா