தமிழ்நாடு அரசு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் “செல்வமகள் சேமிப்புத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற்றிடலாம். அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள்.  

இந்த திட்டத்திற்கான கணக்கைத் தொடங்குவதற்கு குறைந்தபட்சமாக 250 ரூபாய் செலுத்த வேண்டும். வருடத்திற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரையில் இந்த திட்டத்தில் வைப்புத் தொகை செலுத்தலாம். ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி பெறலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகையில் 50 சதவிகிதம் வைப்புத் தொகையைப் பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காகப் பெற்றுக் கொள்ளலாம்.

முதிர்வுத் தொகையைப் பெண் குழந்தையின் திருமணத்தின்போதோ அல்லது 21 வயது நிறைவு பெற்றவுடனோ பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு உண்டு.

இதையும் படிக்கலாம் : வசூலில் ஏமாற்றிய ‘பெல்பாட்டம்’, ‘தலைவி’… பாலிவுட்டுக்கு என்ன சொல்கிறது ‘பாக்ஸ் ஆஃபிஸ்’? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.