நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 50 விழுக்காடானது, 10 விழுக்காடு பணக்காரர்களிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது. 

2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் விவரங்களை தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புறங்களில் உள்ள சொத்துகளில் 55.7 விழுக்காடும், கிராமப்புறங்களில் உள்ள சொத்துகளில் 50.8 விழுக்காடும் 10 விழுக்காடு பணக்காரர்களிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

கிராமப்புறங்களைப் பொறுத்தவரையில் மொத்த சொத்துகளின் மதிப்பு 238.1 லட்சம் கோடியாக உள்ள நிலையில், 132.5 லட்சம் கோடி சொத்தானது 10 விழுக்காடு பணக்காரர்கள் வசம் உள்ளதாக தெரியவந்துள்ளது. 

அதே நேரத்தில் கிராமப்புறத்தில் வசதி வாய்ப்பு குறைவாக உள்ள 50 விழுக்காடு நபர்களிடம் மொத்தம் 10.2 விழுக்காடு சொத்துகளே உள்ளதாகவும் இந்த கணக்கெடுப்பின் வாயிலாக தெரியவந்துள்ளது. நகர்ப்புறத்தில் வசதி வாய்ப்புகள் குறைவாக உள்ள 50 விழுக்காடு நபர்களின் மொத்த சொத்து மதிப்பு 6.2 விழுக்காடாகவே உள்ளது. 

நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 10 விழுக்காடு பணக்காரர்கள் வசம் 80.8 விழுக்காடு சொத்துகள் உள்ளதாகவும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 10 விழுக்காடு பணக்காரர்கள் வசம் 40 விழுக்காடு சொத்துகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்கலாம் : உலக அரங்கில் ’கீழடி’ : யார் இந்த அமர்நாத் ராமகிருஷ்ணன்? தமிழகத்தில் இவ்வளவு வரவேற்பு ஏன்? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.