இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தீபக் சஹார் அண்மையில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடி அசத்தியிருந்தார். விரைவில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் களம் இறங்க உள்ளார். 

இந்நிலையில் இலங்கை தொடரில் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் உடனான கலந்துரையாடலை பகிர்ந்துள்ளார் தீபக் சஹார். 

image

“நாங்கள் இலங்கைக்கு சென்றடைந்ததும் டிராவிட் சார் என்னிடம் முதலில் கேட்டது இது தான். ‘உங்கள் வயது என்ன?’ என்பது தான் அவர் என்னிடம் கேட்டார். நான் 28 வயதாகிறது என்றும். விரைவில் 29 வர உள்ளதாகவும் சொல்லி இருந்தேன். அதற்கு நிஜமாகவே அது தான் வயதா? அல்லது கிரிக்கெட் விளையாட்டிற்காக மாற்றிக் கொண்டதா? எனக் கேட்டார். நான் உடனடியாக இல்லை சார். அது தான் எனது நிஜ வயது என்றேன். அதோடு என அப்பா விமானப்படையில் வேலை செய்ததால் வயது விவகாரத்தில் எந்த தில்லு முல்லும் செய்ய முடியாது என்றேன்” என சொன்னதாக தெரிவித்துள்ளார் தீபக் சஹார்.  

ராகுல் டிராவிடின் பயிற்சியின் கீழ் விளையாட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தியுள்ளதாகவும் சொல்லி உள்ளார் சஹார்.  

இதையும் படிக்கலாம் : வசூலில் ஏமாற்றிய ‘பெல்பாட்டம்’, ‘தலைவி’… பாலிவுட்டுக்கு என்ன சொல்கிறது ‘பாக்ஸ் ஆஃபிஸ்’? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.