வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாக்கும் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஜப்பான் வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்த இரண்டே நாட்களில் வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது. இது அண்டை நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா ஏவிய இரண்டு ஏவுகணைகளும் கிழக்கு கடல் பகுதியில் விழுந்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. ஜப்பானுக்கும் கொரியா தீபகற்பத்திற்கும் இடையிலான கடல்பகுதியில் ஏவுகணைகள் விழுந்ததாக ஜப்பான் ராணுவமும் உறுதி செய்துள்ளது. ஐநா கட்டுப்பாடுகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.