டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது மற்ற அணிகளுக்கு கடுமையாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர் “டி20 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு எங்களுக்கு பிரகாசமாக இருக்கிறது. எங்கள் அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் மேட்ச் வின்னர்கள். போட்டியின் திசையை எந்த நேரத்திலும் மாற்றக் கூடிய ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் மற்ற அணியினருக்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிருக்கும், அது அவ்வளவு எளிதானதாக இருக்காது” என்றார்.

image

மேலும் பேசிய அவர் “ஐபிஎல் அமீரகத்தில் நடப்பதால் உலகக் கோப்பைக்கு தயாராவது சற்று எளிதாகவே இருக்கும். அமீரகத்தின் தட்பவெப்ப நிலை, ஆடுகளங்களின் தன்மை ஆகியவை ஆஸி வீரர்களுக்கு பழகிவிடும். அதனால் எதிரணியின் பந்துவீச்சாளர்களை ஆஸி பேட்ஸ்மேன்கள் ஒரு கை பார்ப்பார்கள். அதேபோல பவுலர்களும் பந்துவீசி விக்கெட்டுகளை சாய்க்க தயாராக இருக்கிறார்கள். அதேவேளையில் இந்தப் போட்டியில் எந்த அணியையும் நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை ” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மேக்ஸ்வெல்.

image

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன. மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். முதலில் இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவிருந்த சூழலில், கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் மீதமுள்ள போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.